இடுகைகள்

கடவுள்கூறு தெய்வமாக, தமிழ்முன்னோர் கொண்டாடி இருந்த தமிழைப், போற்றுவதற்கானதே! திருக்குறளின் முதலாவது அதிகாரம்

படம்
கடவுள்கூறு தெய்வமாக, தமிழ்முன்னோர் கொண்டாடி இருந்த தமிழைப், போற்றுவதற்கானதே! திருக்குறளின் முதலாவது அதிகாரம், என்று தெளிவுபடுத்துவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. தமிழ்முன்னோர், கடவுள் என்றும், இறை என்றும் நிறுவியது, ஐந்திரம் என்கிற ஐந்து ஆற்றல் மூலங்களை மட்டுமே.  அந்த ஐந்திர ஆற்றல்கள் 1.விசும்பு 2.நிலம் 3.நீர் 4.தீ 5.காற்று என்பன ஆகும்.   கடவுளும் இறையும் ஆற்றல் மூலங்கள்.  அவற்றில் விசும்பையே கடவுள் என்றும்- நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறைகளையே இறை என்றும் நிறுவியிருந்தனர் தமிழ்முன்னோர். கடவுள் குறித்த விரிவான விளக்கத்தை, 'கடவுள்! தமிழ்ச்சொல் மட்டுமே' என்கிற கட்டுரையில் புரிந்து கொள்ளலாம். இந்த ஆற்றல் மூலங்கள் தொய்ந்தவைகளைத், தெய்வங்கள் என்று நிறுவினர் தமிழ்முன்னோர்.  தெய்வங்கள் வழிபாட்டு மூலங்கள். அந்தத் தெய்வங்கள் மூன்று வகைப்படும். 1.கடவுள்கூறு தெய்வம் 2.இறைக்கூறு தெய்வம் 3.குலதெய்வம் என்பன. நம்மால் உருவாக்கப்பட்ட அனைத்தையும் கடவுள்கூறு தெய்வங்கள் என்றும்,  நம் உருவாக்கத்தில் பங்கு வகிக்கிற அனைத்தையும் இறைக்கூறு தெய்வங்கள் என்றும்,  ந...

தமிழ்நாட்டின் கல்விப்பாட்டு முயற்சிக்கு ஒரு கேட்பு மந்திரம்.

படம்
தமிழர் கொண்டாடி இருக்க வேண்டிய சீரிய வாழ்மானத்திற்கான கல்வி குறித்தும், நடப்பில் பேரளவு தமிழர் முன்னெடுத்து வரும்  சீரற்ற பிழைப்பிற்கான நிர்வாகம் குறித்தும் பேசுவதற்கனாது இந்தக் கட்டுரை. காட்டிற்குள் பிறக்கிற ஒரு நாய்க்குட்டி தாயுடனும் உடன் விலங்குகளுடனும் ஓடியாடிக் கற்பது சீரிய வாழ்மானத்திற்கான கல்வியாகும். வீட்டில் வளர்கிற ஒரு நாய்க்குட்டி உரிமையாளருடனும், உரிமையாளரின் தலைவி பிள்ளைகளுடனும், உரிமையாளரின் சொந்த பந்தங்கள் நட்புக்களுடனும், வெளியாட்களுடனும் அது நடந்து கொள்ள வேண்டிய முறைகளை உரிமையாளின் மொழியில் பயில்வது சீரற்ற பிழைப்பிற்கான  நிர்வாகமாகும். ஒரு தமிழ்ப்பிள்ளை தாயின் மடியிலும், தந்தையின் தோளிலும், அண்ணன் அக்காவின் கைகளிலும், அண்டை அயலாரின் தொடர்புகளிலும், பள்ளியில் தமிழ்வழிக் கல்வியிலும் கற்பது சீரிய வாழ்மானத்திற்கான கல்வியாகும். அந்தப் பிள்ளையால் தனித்திறனிலோ, வேளாண்மையிலோ, தொழிலிலோ, வணிகத்திலோ சிறக்க முடியும். அந்தப் பிள்ளை உடலுழைப்புக் கூலித்தளத்திற்கான அல்லது நிர்வாகக் கூலித்தளத்திற்கான வேலையை விரும்பாது. ஒரு தமிழ்ப்பிள்ளை மம்மி, டாடி, பிரதர், சிஸ்டர், ஆண்டி...

மறுபிறப்பு

படம்
மறுபிறப்பு உண்மையா? மறுபிறப்பு என்றால் என்ன? கடந்த பிறவியில் நாம் என்னவாகப் பிறந்தோம்? என்று வேறொரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு- மறுபிறப்பு உண்மைதான்- அதுதான் உலகத்தின் வளர்ச்சி. மறுபிறப்பு என்பது ஒன்றித்தலில் உருவாகும் புத்தியல். கடந்த பிறவியில் அம்மா அப்பா என்று இரண்டாக இருந்தோம். என்று விடையளிப்பதற்கு உருவாக்கப்பட்ட கட்டுரை இதுவாகும். இந்தியாவில் இன்றுவரை பேரளவினராக வாழும் இனங்களில் ஒன்று தமிழினம். இரண்டு பிராமண இனம். இந்த இரண்டு இனங்களுக்கும் மதம் கிடையா. தமிழினத்திற்கு ஐந்திணை வாழ்க்கை முறை உண்டு.  பிராமண இனத்திற்கு முந்தை பாஷ்து மொழியில் தொடங்கி நடப்பு ஹிந்தி மொழிவரை, ஆற்றங்கரை ஆற்றங்கரை என்று அவர்கள் நாடோடியாக அலைந்த வகைக்குப் பெற்ற, மாறுபட்ட பல மொழிகளும், மாறுபட்ட பல கலாச்சாரங்களும் உண்டு. இந்தக் கலவைக் கலாச்சாரத்திற்கு ஹிந்தி என்கிற கலவை மொழியைத் தந்தவர்களும் இந்தக் கலவை கலாச்சாரத்திற்கு ஹிந்து என்கிற மதத் தலைப்பைத் தந்தவர்களும் முகமதியர்கள் ஆவார்கள். வட இந்திய மக்களின் வாழ்க்கை முறைக்கு, முகமதியர்கள் இட்ட பெயரான ஹிந்துவை இன்று வரை மதம்கொண்டிராத தமிழினத்திற்கும்,...

இறத்தல், காலமாதல் என்கிற பொருள் பொதிந்த சொற்களில்! உடல் இறையாகிறது. உயிர் காலமாகிறது என்று நிறுவியுள்ளனர் தமிழ் முன்னோர்

படம்
எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்று பெருமிதம் கொள்கிற ஒரே மொழி, உலகில் தமிழ் மட்டுமே ஆகும். தமிழ்- இறத்தல், காலமாதல் என்கிற சொற்களில் பொருத்தியுள்ள செறிவான பொருளைக் கொண்டாடுவதற்கானது இந்தக் கட்டுரை.  முதல் என தமிழ்முன்னோர் நிறுவியது இடமும், காலமும் ஆகும். வெளி, விண்வெளி, விசும்பு என்று மூன்று நிலைகளை எய்துகிறது தமிழர் முதலென நிறுவியதில் ஒன்றான இடம். இது இரண்டாவதாக சொல்லப்பட உள்ள காலத்திற்கு கடந்தும் உள்ளும் அமைந்த நிலை பற்றி இது கடவுள் எனவும் தமிழ்முன்னோரால் கொண்டாடப்படுகிறது.  தமிழ்முன்னோர் இறுதி என்று நிறுவுகிற பெருவெடியில்- அனைத்தும் ஒன்றித்த பெருங்கோள் வெடித்துச் சிதறியதால் அது மிகமிக நுட்பமான தனி ஒன்றுகளாக சிதைந்து வெளியில் இறைந்து காணப்படுகிறது. இதைத்தான் தமிழ்முன்னோர் முதலென நிறுவியதில் இரண்டாவதாகச் சொல்லியுள்ள காலம் ஆகும்.  இந்த மிக மிக நுட்பமான தனி ஒன்றுகளையே தமிழ்முன்னோர் காலம் என்று குறித்தனர். நமது காலம் என்பது என்னவாக இருக்கிறது என்பதை ஒப்பிட்டு நோக்கினால் தமிழ்முன்னோர் தனிஒன்றுகளைக் காலம் என்று குறித்தது ஏன் என்பதை எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும். நாம்...

900 இது தொள்ளாயிரமா? அல்லது ஒன்பது நூறா

படம்
90 இது ஒன்பது பத்துதானே!  தொன்னூறு என்று சொல்லப்படுவது ஏன்?  900 இது ஒன்பது நூறுதானே! தொள்ளாயிரம் என்று சொல்லப்படுவது ஏன்? என்று தமிழ் படிக்கிற அனைவருக்கும் கேள்வி எழாமல் இருந்தால் தாம் வியப்பு. இந்த மாற்றம் முன்னெடுக்கப் படுவதற்கான காரணம் இதுதான். தமிழில் தொல்காப்பியர் காலததிற்கு முன்பு- ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து என்றே எண்மானம் இருந்தது. நமது வீடுகளில் படி அமைக்கும் போது உயரம் எட்டு அங்குலமும், கிடை பத்து அங்குலத்திலும் அமைப்பார்கள். எட்டு என்றால் எட்டுதல் என்றே பொருள். பத்து என்பது பற்றுதல் ஆகும். ஆக ஒற்றைப்படை எட்டில் முடிந்து, இரட்டைப்படை எண் பத்தில் தொடங்குகிறது. ஆக ஒற்றை படை எண்ணில் எட்டே இறுதி எண்ணாக தமிழில் இருந்தது. பத்தில் இரட்டைப்படை எண் தொடங்கி பதினொன்று, பனிரெண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு, இருபது என தொடரும். இரட்டைப் படை எண்ணில் எண்பத்தி எட்டு கடைசி எண் ஆகும். அடுத்து தொடங்கும் மூன்று படை எண் நூறு ஆகும். ஏதோ ஒரு காரணம் பற்றி தமிழன், ஒற்றைப்படை எண்களை எட்டிலிருந்து ஒன்பதாக மாற்றினான். அந்தக் ...

கடவுள்! எங்கே, எப்போது, ஏன், உருவாகிறது? இயல்கணக்கில் தமிழியல் தெளிவுபடுத்துவது என்ன

படம்
தமிழியல் என்பது தமிழர்தம் கோட்பாடும் நடைமுறையுமான இயல் ஆகும். இயல் என்றால் இயக்கம் என்கிற நடைமுறையும், கோட்பாடு என்கிற இயமும் ஆகும். இயற்கை என்பதற்கு கோட்பாடு மற்றும் நடைமுறையின் நீட்சி என்று பொருள். ஆகவே இயல் உடையது இயற்கை. அதாவது கோட்பாடும் நடைமுறையும் கொண்டது இயற்கை.  இயற்கை ஐந்து அடிப்படைகளைக் கொண்டது. அவை முறையே 1.விசும்பு 2.நிலம் 3.நீர் 4.தீ 5.காற்று என்பன. அவற்றுள் நிலம், நீர், தீ, காற்று அகியவற்றின் கோட்பாடு நடைமுறைகளைக் கற்றறியும் துறை இயல்அறிவு (சயின்ஸ்). விசும்பின் முயக்கத்தை கணிப்பது இயல்கணக்கு. இயல்கணக்கை தமிழினம் மட்டுமே கொண்டுள்ளது. உலகினர் கொண்டிருக்கவில்லை. இயல்கணிப்பில் தமிழ்முன்னோரால் உருவாக்கப்பட்ட ஐந்து  முன்னேற்றக்கலைகள் 1.காப்பியம் 2.இலக்கியம் 3.நிமித்தகம் 4.கணியம் 5.மந்திரம். 1. தமிழ்முன்னோர் நிறுவிய முதலாவது முன்னேற்றக்கலை காப்பியம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்கிற அடிப்படையைக் கொண்டது காப்பியம். 2 தமிழ்முன்னோர் நிறுவிய இரண்டாவது முன்னேற்றக்கலை இலக்கியம். அறம் செய விரும்பு என்று ஒவ்வொருவரையும் கட்டாயப்படுத்தும் அடிப்படையைக் கொண்டது இலக்கியம் 3....

ஆரியர்களின் (பிராமணர்கள்) வட நாவலந்தேய (வடஇந்தியா) வருகையை உறுதிப்படுத்தும் இயல்அறிவு (சயின்ஸ்) சான்றுகள்

படம்
தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக்கொண்ட இந்தோ-ஐரோப்பிய மொழிகளைப் பேசும் குழுவினர், தமிழர் மட்டுமே வாழ்ந்திருந்த நாவலந்தேயத்தின் (இந்தியா) சிந்துச் சமவெளி நாகரிகம் முடிவுக்கு வந்த தமிழ்த்தொடராண்டு 1100-1500 (சுமார் கி.மு. 2000 -1500) காலகட்டத்தில் முந்தை பாஷ்து மொழியையும், தனித்துவமான கலாச்சார நடவடிக்கைகளையும் தாங்கி இந்தியாவுக்குள் வந்தவர்களா? இந்திய வரலாற்றிலேயே மிகவும் சிக்கலான, அதிகம் சச்சரவுக்குள்ளான இந்தக் கேள்விக்கு மெதுவாக ஆனால், உறுதியான பதில் கிடைத்துக்கொண்டிருக்கிறது. ஆம்! அவர்கள் அப்படி வந்தவர்கள்தாம் என்கிற குழப்பமற்ற முடிவில் உலகம் முழுவதிலும் இருக்கும் இயல்அறிவர்களைச் சங்கமிக்கச் செய்திருக்கிறது புதிய டி.என்.ஏ.ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மரபணு ஆய்வு (டி.என்.ஏ. என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் டி ஆக்சிரிபோ நியூக்ளிக் ஆசிட் என்பது எல்லா உயிரினங்களுக்குள்ளும் இருக்கும் குரோமோசோம்களின் முக்கிய அங்கமான அமிலம்). இது பலருக்கு வியப்பானதாகவும், சிலருக்கு அதிர்ச்சி தரத்தக்கதாகவும் இருக்கும். ஏனெனில், ஆரியர்கள் புலம்பெயர்ந்து இந்தியாவுக்குள் வந்தவர்கள் என்ற கருத்தை முற்றிலுமாக மர...