கடவுள்கூறு தெய்வமாக, தமிழ்முன்னோர் கொண்டாடி இருந்த தமிழைப், போற்றுவதற்கானதே! திருக்குறளின் முதலாவது அதிகாரம்
கடவுள்கூறு தெய்வமாக, தமிழ்முன்னோர் கொண்டாடி இருந்த தமிழைப், போற்றுவதற்கானதே! திருக்குறளின் முதலாவது அதிகாரம், என்று தெளிவுபடுத்துவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. தமிழ்முன்னோர், கடவுள் என்றும், இறை என்றும் நிறுவியது, ஐந்திரம் என்கிற ஐந்து ஆற்றல் மூலங்களை மட்டுமே. அந்த ஐந்திர ஆற்றல்கள் 1.விசும்பு 2.நிலம் 3.நீர் 4.தீ 5.காற்று என்பன ஆகும். கடவுளும் இறையும் ஆற்றல் மூலங்கள். அவற்றில் விசும்பையே கடவுள் என்றும்- நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறைகளையே இறை என்றும் நிறுவியிருந்தனர் தமிழ்முன்னோர். கடவுள் குறித்த விரிவான விளக்கத்தை, 'கடவுள்! தமிழ்ச்சொல் மட்டுமே' என்கிற கட்டுரையில் புரிந்து கொள்ளலாம். இந்த ஆற்றல் மூலங்கள் தொய்ந்தவைகளைத், தெய்வங்கள் என்று நிறுவினர் தமிழ்முன்னோர். தெய்வங்கள் வழிபாட்டு மூலங்கள். அந்தத் தெய்வங்கள் மூன்று வகைப்படும். 1.கடவுள்கூறு தெய்வம் 2.இறைக்கூறு தெய்வம் 3.குலதெய்வம் என்பன. நம்மால் உருவாக்கப்பட்ட அனைத்தையும் கடவுள்கூறு தெய்வங்கள் என்றும், நம் உருவாக்கத்தில் பங்கு வகிக்கிற அனைத்தையும் இறைக்கூறு தெய்வங்கள் என்றும், ந...