இடுகைகள்

ஜூன், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மறுபிறப்பு

படம்
மறுபிறப்பு உண்மையா? மறுபிறப்பு என்றால் என்ன? கடந்த பிறவியில் நாம் என்னவாகப் பிறந்தோம்? என்று வேறொரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு- மறுபிறப்பு உண்மைதான்- அதுதான் உலகத்தின் வளர்ச்சி. மறுபிறப்பு என்பது ஒன்றித்தலில் உருவாகும் புத்தியல். கடந்த பிறவியில் அம்மா அப்பா என்று இரண்டாக இருந்தோம். என்று விடையளிப்பதற்கு உருவாக்கப்பட்ட கட்டுரை இதுவாகும். இந்தியாவில் இன்றுவரை பேரளவினராக வாழும் இனங்களில் ஒன்று தமிழினம். இரண்டு பிராமண இனம். இந்த இரண்டு இனங்களுக்கும் மதம் கிடையா. தமிழினத்திற்கு ஐந்திணை வாழ்க்கை முறை உண்டு.  பிராமண இனத்திற்கு முந்தை பாஷ்து மொழியில் தொடங்கி நடப்பு ஹிந்தி மொழிவரை, ஆற்றங்கரை ஆற்றங்கரை என்று அவர்கள் நாடோடியாக அலைந்த வகைக்குப் பெற்ற, மாறுபட்ட பல மொழிகளும், மாறுபட்ட பல கலாச்சாரங்களும் உண்டு. இந்தக் கலவைக் கலாச்சாரத்திற்கு ஹிந்தி என்கிற கலவை மொழியைத் தந்தவர்களும் இந்தக் கலவை கலாச்சாரத்திற்கு ஹிந்து என்கிற மதத் தலைப்பைத் தந்தவர்களும் முகமதியர்கள் ஆவார்கள். வட இந்திய மக்களின் வாழ்க்கை முறைக்கு, முகமதியர்கள் இட்ட பெயரான ஹிந்துவை இன்று வரை மதம்கொண்டிராத தமிழினத்திற்கும், நம்

இறத்தல், காலமாதல் என்கிற பொருள் பொதிந்த சொற்களில்! உடல் இறையாகிறது. உயிர் காலமாகிறது என்று நிறுவியுள்ளனர் தமிழ் முன்னோர்

படம்
எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்று பெருமிதம் கொள்கிற ஒரே மொழி, உலகில் தமிழ் மட்டுமே ஆகும். தமிழ்- இறத்தல், காலமாதல் என்கிற சொற்களில் பொருத்தியுள்ள செறிவான பொருளைக் கொண்டாடுவதற்கானது இந்தக் கட்டுரை.  முதல் என தமிழ்முன்னோர் நிறுவியது இடமும், காலமும் ஆகும். வெளி, விண்வெளி, விசும்பு என்று மூன்று நிலைகளை எய்துகிறது தமிழர் முதலென நிறுவியதில் ஒன்றான இடம். இது இரண்டாவதாக சொல்லப்பட உள்ள காலத்திற்கு கடந்தும் உள்ளும் அமைந்த நிலை பற்றி இது கடவுள் எனவும் தமிழ்முன்னோரால் கொண்டாடப்படுகிறது.  தமிழ்முன்னோர் இறுதி என்று நிறுவுகிற பெருவெடியில்- அனைத்தும் ஒன்றித்த பெருங்கோள் வெடித்துச் சிதறியதால் அது மிகமிக நுட்பமான தனி ஒன்றுகளாக சிதைந்து வெளியில் இறைந்து காணப்படுகிறது. இதைத்தான் தமிழ்முன்னோர் முதலென நிறுவியதில் இரண்டாவதாகச் சொல்லியுள்ள காலம் ஆகும்.  இந்த மிக மிக நுட்பமான தனி ஒன்றுகளையே தமிழ்முன்னோர் காலம் என்று குறித்தனர். நமது காலம் என்பது என்னவாக இருக்கிறது என்பதை ஒப்பிட்டு நோக்கினால் தமிழ்முன்னோர் தனிஒன்றுகளைக் காலம் என்று குறித்தது ஏன் என்பதை எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும். நாம் ஒரு நாளுக்கு,

900 இது தொள்ளாயிரமா? அல்லது ஒன்பது நூறா

படம்
90 இது ஒன்பது பத்துதானே!  தொன்னூறு என்று சொல்லப்படுவது ஏன்?  900 இது ஒன்பது நூறுதானே! தொள்ளாயிரம் என்று சொல்லப்படுவது ஏன்? என்று தமிழ் படிக்கிற அனைவருக்கும் கேள்வி எழாமல் இருந்தால் தாம் வியப்பு. இந்த மாற்றம் முன்னெடுக்கப் படுவதற்கான காரணம் இதுதான். தமிழில் தொல்காப்பியர் காலததிற்கு முன்பு- ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து என்றே எண்மானம் இருந்தது. நமது வீடுகளில் படி அமைக்கும் போது உயரம் எட்டு அங்குலமும், கிடை பத்து அங்குலத்திலும் அமைப்பார்கள். எட்டு என்றால் எட்டுதல் என்றே பொருள். பத்து என்பது பற்றுதல் ஆகும். ஆக ஒற்றைப்படை எட்டில் முடிந்து, இரட்டைப்படை எண் பத்தில் தொடங்குகிறது. ஆக ஒற்றை படை எண்ணில் எட்டே இறுதி எண்ணாக தமிழில் இருந்தது. பத்தில் இரட்டைப்படை எண் தொடங்கி பதினொன்று, பனிரெண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு, இருபது என தொடரும். இரட்டைப் படை எண்ணில் எண்பத்தி எட்டு கடைசி எண் ஆகும். அடுத்து தொடங்கும் மூன்று படை எண் நூறு ஆகும். ஏதோ ஒரு காரணம் பற்றி தமிழன், ஒற்றைப்படை எண்களை எட்டிலிருந்து ஒன்பதாக மாற்றினான். அந்தக் காரணத்தை

கடவுள்! எங்கே, எப்போது, ஏன், உருவாகிறது? இயல்கணக்கில் தமிழியல் தெளிவுபடுத்துவது என்ன

படம்
தமிழியல் என்பது தமிழர்தம் கோட்பாடும் நடைமுறையுமான இயல் ஆகும். இயல் என்றால் இயக்கம் என்கிற நடைமுறையும், கோட்பாடு என்கிற இயமும் ஆகும். இயல் உடையது இயற்கை. அதாவது கோட்பாடும் நடைமுறையும் உரியது இயற்கை.  இயற்கையின் கோட்பாடு நடைமுறைகளை அறிவது இயல்அறிவு (சயின்ஸ்) இயற்கையின் வளர்சிதை மாற்றத்தை- தொடர்பு மற்றும் முயற்சிகளைப் பொருத்தி கணிப்பது இயல்கணக்கு. இயல்கணக்கை தமிழினம் மட்டுமே கொண்டுள்ளது. உலகினர் கொண்டிருக்கவில்லை. இயல்கணிப்பில் தமிழ்முன்னோரால் உருவாக்கப்பட்ட மூன்று முன்னேற்றக்கலைகள் 1.நிமித்தகம் 2.கணியம் 3.மந்திரம். கடவுள் என்பது என்ன? முதலெனப்படுவது இடமும் காலமும் என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர். அதில் எல்லையும் இயக்கமும் இல்லாத இடம் கடவுளாக காலத்தால் உருவாக்கப்படுகிறது. காலம் என்பது என்ன? குறிப்பிட்ட எண்ணிக்கையோடு, சொந்த இயக்கத்தோடு, குறிப்பிட்ட எல்லையோடு இடத்தில் உலா வருகிற அடிப்படையும் நுட்பமும் ஆன தனிஒன்றுகளே காலம் ஆகும். தனிஒன்றுகள், தனித்தனியாக இயங்கி வரும்போது இடம் தனிஒன்றுகளுக்குக் கடந்து மட்டும் அமைகிறது.  இரண்டு தனிஒன்றுகள் பொருந்து முக எதிரியக்கம் காரணமாக ஒன்றித்து இயங்கும்

ஆரியர்களின் (பிராமணர்கள்) வட நாவலந்தேய (வடஇந்தியா) வருகையை உறுதிப்படுத்தும் இயல்அறிவு (சயின்ஸ்) சான்றுகள்

படம்
தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக்கொண்ட இந்தோ-ஐரோப்பிய மொழிகளைப் பேசும் குழுவினர், தமிழர் மட்டுமே வாழ்ந்திருந்த நாவலந்தேயத்தின் (இந்தியா) சிந்துச் சமவெளி நாகரிகம் முடிவுக்கு வந்த தமிழ்த்தொடராண்டு 1100-1500 (சுமார் கி.மு. 2000 -1500) காலகட்டத்தில் முந்தை பாஷ்து மொழியையும், தனித்துவமான கலாச்சார நடவடிக்கைகளையும் தாங்கி இந்தியாவுக்குள் வந்தவர்களா? இந்திய வரலாற்றிலேயே மிகவும் சிக்கலான, அதிகம் சச்சரவுக்குள்ளான இந்தக் கேள்விக்கு மெதுவாக ஆனால், உறுதியான பதில் கிடைத்துக்கொண்டிருக்கிறது. ஆம்! அவர்கள் அப்படி வந்தவர்கள்தாம் என்கிற குழப்பமற்ற முடிவில் உலகம் முழுவதிலும் இருக்கும் இயல்அறிவர்களைச் சங்கமிக்கச் செய்திருக்கிறது புதிய டி.என்.ஏ.ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மரபணு ஆய்வு (டி.என்.ஏ. என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் டி ஆக்சிரிபோ நியூக்ளிக் ஆசிட் என்பது எல்லா உயிரினங்களுக்குள்ளும் இருக்கும் குரோமோசோம்களின் முக்கிய அங்கமான அமிலம்). இது பலருக்கு வியப்பானதாகவும், சிலருக்கு அதிர்ச்சி தரத்தக்கதாகவும் இருக்கும். ஏனெனில், ஆரியர்கள் புலம்பெயர்ந்து இந்தியாவுக்குள் வந்தவர்கள் என்ற கருத்தை முற்றிலுமாக மர

குடும்பம் தமிழர்களுக்குச் சொந்தமானது. கூட்டுக் குடும்பம் அல்ல

படம்
குடும்பம் தமிழர்களுக்குச் சொந்தமானது. ஆனால், கூட்டுக் குடும்பமும், கூட்டு குடும்ப வாழ்க்கையைத் தமிழர்கள் தொலைத்து விட்டனர் என்றெல்லாம் புலம்புகிற கதைக்களங்களும் தமிழர்களுக்கானவை அல்ல.  இந்தக் கட்டுரையை இன்று மீண்டும் மறுபதிப்பு செய்வது- இன்றைக்கு விஜய் தொலைக்காட்சியின் ஏறத்தாழ இதே தலைப்பில் அமைந்த- 'நீயா நானா' நிகழ்ச்சி பார்த்த தமிழ்மக்கள் உரசிப்பார்க்கும் வகைக்கு ஆகும். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை எவ்வளவு உயர்ந்தது தெரியுமா? கூட்டு குடும்ப வாழ்க்கையைத் தமிழர்கள் தொலைத்து விட்டனர் என்றெல்லாம் புலம்புகிற கதைக்களங்கள் நிறைய உண்டு.  ஆனால் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை தமிழர் பண்பாடு அல்லவே அல்ல என்பதே உண்மை. தலைவன் தலைவியைக் கொண்டாடுகிற, தம்மின் தம்மக்கள் அறிவுடைமையைக் கொண்டாடுகிற பாங்கு தமிழர்களுடையது. கூட்டுக் குடும்பத்தில் இது சாத்தியமே இல்லை.  தம்மின் தம் மக்கள் அறிவுக்கு பொருந்தாத, முன்னோர்களின் நாடோடி வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களோடான, பொய்யான தொல்கதைகளைப் போற்றிக் கொண்டாடுகிற பிராமணிய இனத்திற்குச் சொந்தமானதுதாம் இந்தக் கூட்டுக்குடும்ப நடைமுறை.  கூட்டுக் குடும்ப நெறிமுற

ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழர்களைப் பின்தொடர முடியுமா? அதற்குத் தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன

படம்
வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த, ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழர்களைப் பின்தொடர முடியுமா? அதற்குத் தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன? என்று கேட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. நடப்புத் தமிழ்த்தொடராண்டு 5125. ஐயாயிரத்து நூற்று இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நாவலந்தேய இந்தியாவில் வாழ்ந்திருந்தவர்கள் தமிழர்கள் மட்டுமே. நாவலந்தேய இந்தியா என்பது கிழக்கே குணக்கடல் மேற்கே குடக்கடல் தெற்கே குமரிக்கடல் வடக்கே இமயமலை என்பதாக எல்லை கொண்டிருந்த பகுதியாகும். தமிழ்மொழியில் கடலை- அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை என பல சொற்களால் குறிப்பிடப்படுகிறது

கோயில்களில் வழிபாட்டு அடையாளமாக இருப்பது நடுகல்! நடுகல் வழிபாடே நமது தமிழர் வழிபாடு.

படம்
தமிழ்முன்னோர் நிறுவியுள்ள முதலெனப்படுவது இடமும் காலமும் என்பதில்- இடம் என்பது விசும்பு என்கிற திரம், அது கடவுள் என்றும் பேசப்படுகிறது. காலம் என்பது அடிப்படையில் தனிஒன்றுகள், வழிநிலையில் நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரம், அது இறை என்றும் பேசப்படுகிறது.  கடவுளும், இறையும் பல்வேறு உருவாக்கங்களில் தொய்ந்திருக்கிற காரணம் பற்றி, நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு. நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது எல்லாம் இறை கூறு. கடவுள் கூறையும், இறைக் கூறையும் தெய்வமாக வழிபடுவது தமிழர் மரபு.  கடவுள் ஒன்றே ஒன்று. இறை நான்கு. அவற்றின் கூறுகளாக அமைந்த தெய்வங்கள் பற்பல. ஐந்திரம் என்ற பொருள்பொதிந்த சொல்லில் தமிழர் நிறுவிய ஐந்து திரங்கள் இந்தக் கடவுளும் இறையும். கடவுள் கூறு தெய்வத்திற்கு கடந்தும் உள்ளும் இருப்பது என்கிற அடிப்படையில் மலையையும் நடுகல்லையும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்தலையும் அடையாளமாக்கியிருந்தனர் தமிழ்முன்னோர்.  சேயோன் வழிபாடு முருகன் வழிபாடாக மாறிய பின்னர் முருகன் கடவுள்கூறு தெய்வம் ஆனபோதும் முருகனுக்கும் உருவவழிபாடு தமிழ்முன்னோரால் முன்னெடுக்கப்பட்டது. கடவுள் என்பது வெளி என்கி