இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பல நூறு தமிழ்ச் சொற்களின் வரையறைகள் வரிசையில்- ஐந்திரம்!

படம்
நிறைய தமிழ்ச் சொற்களை, அதன் பொருள் பொதிந்த வரையறைகளை, பிராமணியம், ஐரோப்பியம், மார்க்சியம், வேறுவேறு மதங்கள் என்று பல்வேறு அயல்சார்புகளில் மலைப்புகளில், தொலைத்து விட்டு, நாம் நீர்த்துப் போன வடிவங்களாக அச்சொற்களைக் கையாண்டு வருகிறோம். ஒவ்வொரு சொல்லாக வரையறை மீட்பதற்கானது இந்தக் கட்டுரை 'ஐந்திரம்' என்ற சொல்லின் வரையறையை இந்தக் கட்டுரையில் முன்னெடுத்துள்ளேன்.  ஐந்திரம்: தமிழில் 'ஐந்திரம்;' என்று வழங்கப்படுகிற சொல் நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற திரண்ட ஆற்றல்களுக்கான பொதுச் சொல் ஆகும்.  தமிழில் உள்ள பெரிய என்ற ஒப்பீட்டுச் சொல்லை வியந்த பிராமணியர்கள் அதை பிர என்று சமஸ்கிருதத்தில் ஒலிமாற்றம் செய்து, உயர்த்திப் பிடிக்கும் வகைமைகளுக்கான பிரபலம், பிரமாண்டம், பிரசாதம், பிரணவம், பிரதமர், போன்ற நிறைய சொற்களை சமஸ்கிருத்ததில் உருவாக்கிக் கொண்டார்கள்.  அந்த வகையில் தமிழன் கண்ட ஐந்திரத்திற்கும் ஒரு சொல்லை உருவாக்கினார்கள். அந்தச் சொல்தான் பிரபஞ்சம். இதற்குப் பெரிய ஐந்து என்று பொருள்.  அவர்கள் மொழிமாற்றிய பிரபஞ்சம் என்ற சொல்- நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்திர ஆற்ற

கிழமைகள் தமிழ்முன்னோர் உலகிற்கு அளித்த கொடை

படம்
கிழமைகள் தமிழ்முன்னோர் உலகிற்கு அளித்த கொடையானது எப்படி? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு, விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.  இமயத்தில் தோன்றிய மனிதஇனத்திற்கு கிடைத்த இரண்டு நிலப்பகுதிகளில்- ஒன்று, இமயத்தின் இடமாக அமைந்த ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்க, என்கிற மிகப் பெரும் பகுதி.  அந்தப் பெரும்பகுதியினரின் வாழ்க்கை நிலையானதாக அமையாத பேரளவு பயணமாகிய காரணம் பற்றி- சில குழுவோடு சில குழுக்கள் மீண்டும் மீண்டும் மோத வேண்டியிருந்த வகையில், அவர்களுக்குக் கிடைத்த கோட்பாடுகள் பாகுபாடும் முரண்பாடும் ஆகும். அவற்றிலேயே உலகம் இன்றுவரை பயணித்து வருகிறது. இமயத்தில் தோன்றிய மனிதஇனத்திற்கு கிடைத்த இரண்டு நிலப்பகுதிகளில் இமயத்தின் வலமாக அமைந்த தேயம் என்கிற பொருளில் பெயர் சூட்டப்பட்டிருந்த, இன்று மறுவி இந்தியா என்று அழைக்கப்படுகிற நாவலந்தேயம் என்னும் முப்புறம் கடல் அமைந்த சிறு பகுதி மற்றொன்று.  அவர்களுடைய நிலைத்த வாழ்க்கை அவர்களுக்கு வழங்கிய கோட்பாடு, வகைபாடு என்கிற இருவேறு உலகத்து இயற்கை என்கிற நடுநிலைமைப்பாடு ஆகும். அதனால் அவர்களுக்கு இயல்மொழியான தமிழும், இயற்கையை ஒட்டிய ஐந்திணை

குமரிக் கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர்

படம்
  குமரிக் கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர் நான்காயிரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு- எந்த அயல் இயல்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம், தமிழர்களே இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக மாந்தராக விளங்கி வந்தனர். இந்தியா என்பது பாரதம் என்ற பெயரிலோ இந்தியா என்ற பெயரிலோ அதுவரை யாராலும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. குமரிக் கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர். அது உலகம் முழுவதும் தமிழருக்கு வணிகத் தொடர்பு இருந்த காலம். உலகம்- தமிழர் இருப்பிடத்தை அறிய ஆர்வம் கொண்டிருந்த காலம். உலகினர் தமிழர் நாகரிகக் கூறுகளில் மலைத்திருந்த காலம். இந்தியா குறித்து ‘நாவலந்தேயம்’ என்ற அறிமுகம் மட்டுமே இருந்தது. அதைத்தான் உலகினர், ந்தேயம் -ந்தேயா - India என்று பதிவு செய்தனர். அமெரிக்காவில் ஐரோப்பியர் இந்தியாவைத் தேடியதும் அதன் பொருட்டே. வடவர்கள் இந்தியா என்ற சொல்லை விரும்ப மாட்டார்கள். ஹிந்தியில் குறிப்பிடும் போது (ரூபாய் நோட்டில்) பாரதிய ரிசர்வ் பைங் என்றே இருக்கும். பாரதஸ்டேட் பைங் பாரதிய ஜனதா கட்சி என்பனவற